தொடக்கம் மற்றும் நோக்கம்
2025ஆம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி நடைபெற்ற அன்பிய மாநாட்டில், பேரருட்பணி. சேவியர் பெனடிக்ட் அவர்களின் முன்னிலையில், குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் முனைவர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் யூபிலி ஆண்டை முன்னிட்டு "மருத்துவக்குழு"த் துவக்கி வைத்தார். இந்த முயற்சி, நலிந்தோர் மற்றும் படுக்கை நோயாளிகளின் உடல், மன மற்றும் ஆன்மீக நலனைக் காக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
பங்கேற்பு முறை
ஒவ்வொரு பங்கிலும் 10 அன்பியங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து 2 நபர்கள்.
10 அன்பியங்களுக்கு மேல் உள்ள பகுதிகளில் இருந்து 1 நபர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்களவில் மருத்துவக் குழுவாகச் செயல்படுவார்கள்.
அமைப்பு மற்றும் திட்டமிடல்
இத்திட்டம் குழித்துறை மறைமாவட்ட அன்பியப் பணிக்குழுவின் இயக்குநர் அருட்பணி. மோ. ஆல்வின் விஜய் மற்றும் புனித சவேரியார் பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குநர் அருட்பணி. சார்லஸ் விஜூ ஆகியோரின் கூட்டு முயற்சியில் திட்டமிடப்பட்டது.
மருத்துவக்குழுவின் முக்கிய பணிகள்
இந்த மருத்துவக்குழு, குழித்துறை மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளிலும் செயல்படுத்தப்படும். நலிந்தோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
நோயாளிகள் அடையாளம் காணுதல்
கரிசனைக்குரியவர்கள் (முதியவர்கள், படுக்கை நோயாளிகள், தொடர் சிகிச்சை பெறுவோர்) பட்டியலிடப்படுவர்.
மருத்துவ உதவிகள்
Wheelchairs, Oxygen Cylinders போன்ற உபகரணங்கள் வழங்கப்படும்.
நடமாடும் மருத்துவக் குழு
இக்குழு மறைமாவட்டத்தின் "நடமாடும் மருத்துவக் குழு" ஆகவும் செயல்பட்டு வருகிறது.
ஆன்மீக மற்றும் உணர்ச்சி ஆதரவு
நோயாளிகளுக்கு ஆன்மீக ஆதரவும், வழிகாட்டலும் வழங்கப்படுகிறது.